1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (15:48 IST)

மீண்டும் தொடங்கியது புஷ்பா படப்பிடிப்பு!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மசாலா இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா முதல் அலையின் போது  காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது.

பின்னர் தொடங்கிய படப்பிடிப்பு முடியும் தருவாயில் மீண்டும் கொரோனா இரண்டாம் அலையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்பை இப்போது படக்குழு தொடங்கியுள்ளது.