1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (09:54 IST)

புஷ்பா இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நிறுத்தம்…. காரணம் KGF 2 வா?

அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தின் வெற்றி இந்தியா முழுவதும் அறிந்த நடிகராக அவரை ஆக்கியுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா the Rule உருவாகி வருகிறது. சமீபத்தில் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கே ஜி எஃப் 2 படத்தைப் பார்த்த இயக்குனர் சுகுமார், புஷ்பா 2 படத்தின் உருவாக்கத்தில் சில மாற்றங்களை செய்ய விரும்பி, இப்போதைக்கு படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.