வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (16:50 IST)

பாலத்தில் கார் மோதி விபத்து… உயிர் தப்பிய ஜெய், பிரேம்ஜி

பாலத்தில் கார் மோதிய விபத்தில், ஜெய் மற்றும் பிரேம்ஜி இருவரும் உயிர் தப்பினர்.




 
‘சென்னை 28’ உள்பட சில படங்களில் ஒன்றாக நடித்தவர்கள் ஜெய் மற்றும் பிரேம்ஜி அமரன். இருவரும் நல்ல நண்பர்களும் கூட. இன்று தன்னுடைய ஆடி காரில் ஜெய் பயணிக்க, அவருடன் பிரேம்ஜியும் இருந்துள்ளார். அவர்கள் சென்ற கார், சென்னை அடையாறு பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. விபத்தில் இருவரும் உயிர் தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை.