1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (19:16 IST)

மனைவி என்பதையே மறந்த பிரபல நடிகை : கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

இந்தி சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தீபிகா படுகோனே. இவர் நடிக்க வந்தது முதல் தற்போது வரை ஹிட்டான படங்களைக் கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் தான் திருமணம் செய்து கொண்டதையே அவர் மறந்த சம்பவத்தை குறித்து ரசிகர்கள் கேலி செய்துவருகிறார்கள்.
அண்மையில் தலைநகர் டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீபிகா படுகோனே தனது தங்கை அனிஷா படுகோனேவுடன் கலந்துகொண்டார்.
 
அந்த நிகழ்ச்சியில் பேசிய தீபிகா படுகோனே, தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை குறித்து தெரிவித்தார்.அப்பொழுது, நான் பெற்றோருக்கு ஒரு மகள், நான் ஒரு தங்கை, ஒரு நடிகை எனக் கூறியவர். நான் ஒரு மனைவி என்று கூறுவதை மறந்துவிட்டார். 
 
உடனே, ஒரு செய்தியாளர் அவர் பேசும் பொழுது குறுக்கிட்டு, நீங்கள் மனைவி என்பதை நினைவூட்டினார். அதைக் கேட்டுவிட்டு தான் மறந்துவிட்டதாக் கூறி வெட்கப்பட்டார். 
 
இந்த நிகழ்சியின் வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், திருமணமானதையே மறந்துவிட்டீர்களா எனக்கேட்டு சமூகவலைதளத்தில் தீபிகா படுகோனை கலாய்த்துவருகின்றனர்.
மேலும், தீபிகாவின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங்கை , டுவிட்டரில் டேக் செய்து, நீங்களும் தீபிகாவும் உண்மையில் மனைவி தானா! என்பதைக் கேட்டு கிண்டலடித்து வருகின்றனர்.