1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 13 ஜூன் 2022 (23:52 IST)

பிறந்த வீட்டிற்குச் சென்ற நயன்தாரா....

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் காதலர்களாக வலம் வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன்  தம்பதியினர் கடந்த 9 ஆம் தேதி திருமணம் முடிந்து அடுத்த நாள் இருவரும் திருமலை திருப்பதி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துகொண்டனர்.

இந்த  நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன்  தம்பதியர் திருமணத்திற்கு பின் திருப்பதிக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், இருவரும் திருமணத்திற்குப் பின்  புதிய பங்களாவில் குடியேறியுள்ளதாகவும் கூறப்பட்டது.

தனது  நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நயன் தாரா, பிறந்த ஊரான திருவல்லாவுக்குச் சென்று  பெற்றோர்களிடம் ஆசி பெற்றனர். அங்கு இரண்டு வாரங்கள் வரை அவர்கள் நயன்தாராவுடன் பெற்றோருடன் தங்கவுள்ளனர்.  அதன் பின் சென்னைக்குத் திரும்பி சினிமா பணிகளில் ஈடுபடவுள்ளனர்.