1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (16:49 IST)

அண்ணாத்த ஷூட்டிங் ரத்தானததால் நயன்தாரா ஹேப்பி- ஏன் தெரியுமா?

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் ரத்தானதால் ஐதராபாத்தில் நடக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள  ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்த நிலையில் படக்குழுவைச் சேர்ந்த 4 பேருக்குக் கொரோனா ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு அனைவரும் சென்னைக்கு திரும்பினர். ஆனால் நயன்தாரா மட்டும் ஹைதராபாத்திலேயே தங்கிவிட்டார்.

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பும் சமந்தாவை வைத்து ஐதராபாத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக பயோபபுளில் இருந்ததால் நயன்தாராவால் ஒரே ஊரில் இருந்தாலும் காதலரைப் பார்க்க முடியாததால் இப்போது அவரோடு அங்கேயே தங்கிவிட்டாராம். இதனால் இப்போது நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகளையும் படமாக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.