வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2019 (15:18 IST)

பண பிரச்சனை: நாடோடிகள் 2 டிராப்?

கடந்த 2009 ஆம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் நடிகர் சசிகுமார், பரணி, அனன்யா, அபிநயா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர்  நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பெற்ற நாடோடிகள்.  
 
இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'நாடோடிகள் 2' என்ற பெயரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இதில் சசிகுமாருடன் அஞ்சலி, அதுல்யா, பரணி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தையும் சமுத்திரகனியே இயக்கியுள்ளார்.
 
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதமே நிறைவடைந்துவிட்டது. ஆனால், இப்படம் இன்னும் வெளியாக நிலையில், இந்த படம் கைவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
தயாரிப்பு தரப்பில் படத்திற்கு எந்த ஒரு பணச்செலவும் செய்யப்படாத நிலையில், சசிகுமாரும் சமுத்திரகனியும்தான் இணைந்து பணம் போட்டு படத்தை எடுத்தார்களாம். ஆனால், தயாரிப்பாளர் இந்த படத்தை வைத்து ரூ.2 கோடி கடன் வாங்கிள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த காரணத்தினால், படம் கைவிடப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.