1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 அக்டோபர் 2022 (16:22 IST)

‘நான் நாவலைப் படமாக்க மாட்டேன்’ … இயக்குனர் மிஷ்கின் கருத்து!

இயக்குனர் மிஷ்கின் தற்போது இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். மிஷ்கினின் படங்களில் எப்போதும் பின்னணி இசையும் பாடல்களும் பேசுபொருளாக இருக்கும். அது இளையராஜா இசை அமைத்ததாக இருந்தாலும், அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் சரி. அந்த அளவுக்கு இசையில் ஈடுபாடு கொண்டவர் மிஷ்கின். இந்நிலையில் அவர், தனது தம்பி அதித்யா இயக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் “நான் எப்போதுமே நாவலைப் படமாக்கப் போவதில்லை. நாவல் என்பது பெரிய வடிவம். திரைக்கதை என்பது அதிலிருந்து வித்தியாசமான ஊடகம். இயக்குனர் வெற்றிமாறன் எல்லாம் சிறப்பாக நாவலைப் படமாக்குகிறார். ஆனால் என்னுடைய நிலைப்பாடு காரணமாக நான் எந்தவொரு நாவலையும் படமாக்கப் போவதில்லை” எனக் கூறியுள்ளார்.