1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (23:38 IST)

என் கணவர் அடித்து துன்புறுத்தினார்...தற்கொலைக்கு முயன்றேன்- பிரபல நடிகை

பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் தொகுத்து வழங்கும்  நிகழ்ச்சியில் பங்கேற்ற பூனம் பாண்டே கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விளக்கினார்.

தமிழ் சினிமாவில் தாம் தூம் , தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது, தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் பங்கேற்ற  நடிகை பூனம் பாண்டே தன் கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விளக்கினார். அதில்,  சாம் பாம்பேவுடன் நான் 4 ஆண்டுகளாகத் தொடரில் இருந்தேன். அப்போது நான்  சரியாகத் தூங்கவில்லை.  சாப்பிடவுமில்லை; அவர் என்னை அடித்தார். அதனால் நான் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தேன் என தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பூனம் பாண்டே –சாம் பாம்பே இருவரும் திருமணம் முடிந்து தேனிலவுக்கான கோவா சென்றபோது இருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது, பூனம் பாண்டே போலீஸில் புகார் தவரே அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.