1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (21:52 IST)

மீனாவும் நைனிகாவும் தைரியமாக இருக்க வேண்டும்- நடிகை குஷ்பு

நடிகை மீனாவின்  கணவருக்கு புறாவின் எச்சத்தால் ஏற்படும் சுவாசத் தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு இரண்டு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டு, வேறு ஒருவரிடம் இருந்து பெறுவதாக மருத்துவமனை திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்குத் தாமதம் ஆனதால், இபப்டியே அவர் குணமாகலாம் என  நினைத்தனர். துரதிஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமான நிலையில் இன்று அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
.
 இந்த நிலையில், நடிகை மீனாவி கணவர் வித்யாசாகர் மரணம் குறித்து, நடிகை  குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:  மீனாவின் கணவருக்கு 3 மாதத்திற்கு முன்பே நுரையீரல் பாதிக்கப்பட்டது., அந்தப் பாதிப்பில்தான் அவர் உயிரிழந்தார். அவர் கொரோனாவால் உயிரிழந்ததாகத் தவறான தகவல் பரப்ப  வேண்டாம். ஊடகங்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மீனாவும் அவரது மகள் நைனிகாவும் தைரியமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.