வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (13:21 IST)

மாரி செல்வராஜ் இயக்கும் பயோபிக் படம்… இவருடைய கதைதானாம்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம் மனத்தி கனேசன் எனும் வீரரின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்படும் படமாம்.

மாரி செல்வராஜ் இயக்கிய பரியெறும் பெருமாள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து அவர் இப்போது தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அவர் தன் முதல்பட தயாரிப்பாளர் பா ரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரம்மை கதாநாயகனாக ஒரு படம் இயக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அந்த படத்தை பற்றிய ஒரு முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதையை விளையாட்டை மையமாக வைத்து மாரி செல்வராஜ் உருவாக்கியுள்ளாராம். ஆனால் அது என்ன விளையாட்டு சம்மந்தப்பட்டது என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். கரணன் படம் ரிலீஸான பின்னர் இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அந்த படம் மனத்தி கணேசன் எனும் கபடி வீரரின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்படும் பயோபிக் படம் என சொல்லப்படுகிறது.