செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (09:22 IST)

மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம்: தனுஷ் அறிவிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன 
 
சற்றுமுன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டன. அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தையும் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தற்போது தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இதனை முடித்துவிட்டு அவர் ராட்சசன் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படமும், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க உள்ளார், இந்த படங்களை முடித்துவிட்டு அவர் மீண்டும் மாரி செல்வராஜ் உடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது