1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2019 (20:19 IST)

என்னை பல பேர் ஏமாத்தியிருக்கிறார்கள் - நடிகர் தனுஷ் வேதனை

தமிழ்சினிமாவில் உள்ள முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் வெற்றிமாற இயக்கத்தில்  பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகிவரும் ‘அசுரன் ’என்ற படத்தில் நடித்துள்ளார். கலைப்புலி  எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்  இந்தப் படத்தை அக்டோபர் 4 ஆம் தேதி திரைக்குக் கொண்டுவரும் விதமாக இன்று இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது. 
 
இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்  தனுஷ் கூறியதாவது :
வெற்றிமாறம் இயக்கத்தில் நான் நடித்துள்ள அசுரன்  படம் எனக்கு முக்கியமான படமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். வட சென்னைக்கு விருது கிடைக்கவில்லையே என பலரும் கேட்கிறார்கள். விருதுக்காக படம் எடுப்பதில்லை நாங்கள். படம் மக்களுக்கு பிடித்தால் சரி.அந்த் கவுரம் எங்களுக்கு கிடைத்து விட்டது. இப்போதெல்லாம் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது எளிதாம விஷயமல்ல. என்னை பலபேர் ஏமாத்தியிருக்கிறார்கள்.ஆனால் அசுரன் படம் தொடங்கும் முன்பாகவே முழு சம்பளத்தையும் என்னிடம் கொடுத்தார் தயாரிப்பாளர் தாணு.  அவர் கொடுத்த பணம் அப்போது எனக்கு முக்கியமாக இருந்தது என தெரிவித்தார்.