செவ்வாய், 24 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 30 மே 2017 (12:52 IST)

சம்பளமே வேண்டாம்; நீங்களா பாத்து போட்டு கொடுங்க: மாகாபா!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்புவர் மாகாபா.ஆனந்த். இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.


 
 
இதனால் சினிமா ஆசையில், சந்தானம் சிவகார்த்திகேயன் போல பெரிய லெவலுக்கு போய்விடலாம் என கணக்கு போட்டு வரியாய் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
 
இவரது நடிப்பில் இதுவரை மூன்று படங்கள் ரிலீஸாகி இருக்கின்றன. ஆனால் ஒன்று கூட ஓடவில்லை. இந்நிலையில் படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்கிறார், பல கண்டிஷன் போடுகிறார் என இவர் மீது புகார்கள் வந்தன.
 
தற்போது இவரது இரண்டு படங்கள் கிடப்பில் போடப்பட்டு, எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியவில்லை. சினிமாவை பற்றி தற்போது தெரிந்துக்கொண்ட மாகாபா, சம்பளமே வேண்டாம்... நீங்க கொடுக்கிறதைக் கொடுங்க என்ற அளவுக்கு இறங்கி வந்துவிட்டாராம் என செய்திகள் வருகிறது.