1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 26 ஜூன் 2018 (21:46 IST)

நடிகைகளுக்கு நடுவே படுத்திருந்த மஹத் : என்ன நடக்குது பிக்பாஸில்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் படுத்திருக்கும் பெட்டில் அவர்களுக்கு நடுவே மஹத் படுத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

 
சமையல் அறையில் தாடி பாலாஜி நித்யாவிற்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரை வெறுப்பேற்றுவதற்காக நடிகர் மஹத் பெண்களின் அறைக்கு சென்று ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஒன்றாக படுத்திருக்கும் பெட்டில் ஏறி அவர்களுக்கு நடுவே படுத்து பேசிக்கொண்டிருந்தார். 
 
அப்போது அங்கு வந்த பாலாஜி அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து ‘ என்னடா நடக்குது இங்க.. ஒரு அஞ்சு நிமிஷம் இல்லனா’ என கேட்டார். அதேபோல், அங்கு ஜனனியும் இதைக்கண்டு அதிர்ச்சியைடந்தார். அதன் பின் அவர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார்.