வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 மே 2020 (18:59 IST)

ஓடிடியில் வெளியாகிறது கீர்த்திசுரேஷ் படம்: கார்த்திக் சுப்புராஜ் அதிரடி முடிவு

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் தற்போது காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூபாய் 5 கோடி முதல் 500 கோடி வரை பட்ஜெட்டில் தயாரான பல படங்கள் திரையரங்குகளில் வெளியிட தயாராக இருந்தும் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளது 
 
இந்த நிலையில் வேறு வழியின்றி ஒரு சில திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ உள்பட ஒருசில தமிழ் படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிட பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த ’பெங்குயின்’ என்ற திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் ஓடிடி பிளாட்பாரத்தில் இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த படம் அமேசான் பிரைமில் வரும் ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த நிலையில் தற்போது இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாவதால் பெரும் ஏமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது