1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (11:40 IST)

கரண் ஜோஹரின் பத்மஸ்ரீ விருதை திருப்பிப் பெறவேண்டும் – கங்கனா ரனாவத் கருத்து!

பாலிவுட் இயக்குனரும் நடிகருமான கரண் ஜோஹருக்கு கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி பெறவேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட் நடிகரான கரண் ஜோஹர் வாரிசு அரசியலை பாலிவுட்டில் வளர்த்தெடுத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டை திரும்ப திரும்ப வைத்து வருகிறார். இந்நிலையில் அவர் இணை தயாரிப்பாளராக இருந்த குஞ்சன் சக்ஸேனா என்ற படத்தை பற்றி கங்கனா கோபமான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த படத்தில் உண்மையான கருத்துகள் திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீவித்யா ராஜன் என்ற பெண் விமானியின் பங்கு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்மந்தமாக இணையத்திலும் ரசிகர்கள் காட்டமான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இதைக் குறிப்பிட்ட கங்கனா ரனாவத் கரண் ஜோஹருக்கு வழங்கப்படட் பத்மஸ்ரீ விருதை திரும்ப பெறவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.