வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2019 (15:10 IST)

நேர்கொண்ட பார்வை படத்தில் மீண்டும் மற்றொரு பாலிவுட் நடிகை!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யாபாலனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பாலிவுட் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழ் சினிமாவின் தலையாய  நடிகர் தல அஜித் எச். வினோத் இயக்கும் ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்து ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்' படத்தின் ரீமேக். 
 
அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர். 
 
இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து  ஆகஸ்ட் 10-ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

படத்தை பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது கல்லி பாய் படத்தில் நடித்த கல்கி கோச்லின் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரும்  இதில் பங்கு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.