1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (11:48 IST)

ரசிகரின் கேள்விக்கு காஜல் அகர்வால் பதிலடி!

கேரளாவில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி அந்த மாநிலமே பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

குறிப்பாக இடுக்கி, எர்ணாகுளம், ஆலுவா செங்கனூர், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு 320க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.. இதையடுத்து கேரளாவில் இன்னலுக்கு ஆளான மக்களுக்கு உதவிகள் குவிந்து வருகின்றன. திரையுலகம் சார்பிலும் ஏராளமானோர் நிதி மற்றும் பொருள் உதவிகள் செய்து வருகின்றனர்.
 
இந்தநிலையில், நடிகை காஜல் அகர்வாலிடம், டுவிட்டரில் ரசிகர் ஒருவர், ‘கேரளா வெள்ளத்துக்காக நீங்கள் பண உதவி செய்யவில்லையே?’ என்று கிண்டல் செய்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.
 
இதற்கு, ‘‘நான் என் கடமையை செய்துவிட்டேன். அதை உங்களிடம் கண்டிப்பாக நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் உதவிக்கு நன்றி’’ என்று பதில் அளித்துள்ளார்.