வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (18:30 IST)

நாச்சியாரை அடுத்து மீண்டும் போலீஸ் வேடத்தில் ஜோதிகா

இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான 'நாச்சியார்' திரைப்படத்தில் நடிகை ஜோதிகா போலீஸ் வேடத்தில் நடித்து அசத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் அவர் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.
 
இந்த படத்தில் அவருடன் நடிகை ரேவதியும் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். 'ஜாக்பாட்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஜோதிகாவின் கணவர் சூர்யா தயாரித்துள்ளார்.
 
இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ளது. இந்த படத்தில்  யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.