வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2019 (09:36 IST)

தொடர்ச்சியாக 3 படங்கள்.. 3 இயக்குனர்கள் … - ஜெயம் ரவியுடன் கைகோர்த்த பட நிறுவனம்

நடிகர் ஜெயம் ரவி வரிசையாக ஒரே பட நிறுவனத்திற்கு 3 படங்கள் நடிக்க இருக்கிறார். அதற்காக 3 இயக்குனர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான அடங்கமறு படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குனரின் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதையடுத்து அவர் ஸ்கிரீன் சீன் நிறுவனம் எனும் வரிசையாக ஜெயம் ரவி நடிக்கும் 3 படங்களைத் தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது.

இந்தப் படங்களில் ஒன்றின் இயக்குனராக மகிழ்திருமானி ஒப்பந்தமாகியுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தடம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மற்ற 2 படங்களையும் இயக்கும் இயக்குனர்கள் யார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் அகமது மற்றும் செல்வராகவன் ஆகியோர் ஜெயம் ரவியின் மற்ற இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்த இரண்டு படங்களில் அகமது இயக்கும் படம் முதலில் தொடங்கும் எனத் தெரிகிறது. செல்வராகவன் இப்போது சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படத்தின் பின் தயாரிப்புப் பணிகளில் மும்முரமாக உள்ளார். அந்தப்படம் ரிலிஸானவுடம் இந்தப்படம் குறித்தான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.