1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (22:10 IST)

ஹரியின் அடுத்த படத்தில் இணைந்த ‘பேட்டக்காரன்’

இயக்குனர் ஹரி இயக்கவுள்ள அடுத்த படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்பதும் இது அவருடைய 33 வது படம் என்பது தெரிந்ததே 
 
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் ஏற்கனவே ஒப்பந்தமான நடிகை தற்போது ஜெயபாலன் என்ற நடிகர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
 
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் என்ற திரைப்படத்தில் பேட்டக்காரன் என்ற கேரக்டரில் அசத்தலாக நடித்தவர் இவர் என்பதும் அதன் பின்னர் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்திலும் ஜெயபாலனுக்கு மிக முக்கிய கேரக்டர் என்றும் அவருடைய கேரக்டர் தான் படத்தின் கதையை திருப்புமுனை கேரக்டர் என்றும் கூறப்படுகிறது