1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 25 மே 2023 (11:23 IST)

சிம்புக்காக எழுதியதுதான் விஜய் 68 படக் கதையா?... தீயாய் பரவும் தகவல்!

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இப்போது சென்னையில் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. ஜூலை மாதத்துக்குள் மொத்த ஷூட்டிங்கும் முடிவடையும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் படத்தில் மன்னா கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தமன்னா விஜய்யோடு சுறா என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை சிம்புவுக்காக மாநாடு படம் தடைபட்டு நின்ற போது வெங்கட் பிரபு எழுதியது என சொல்லப்படுகிறது. அப்போது அந்த படம் கைகூடாததால் இப்போது விஜய்க்காக சில மாற்றங்கள் செய்து வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.