வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (14:43 IST)

ஒருநாள் தியானம் பண்ண அனுமதி குடுங்க.. கோரிக்கை வைத்த இளையராஜா! – அனுமதிக்குமா பிரசாத் ஸ்டுடியோ!

பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைக்க மறுக்கப்பட்டதால் தனி ஸ்டுடியோ கட்டியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா ஒருநாள் பிரசாத் ஸ்டுடியோவில் தியானம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் இசைஞானியாக வலம் வரும் இளையராஜா கடந்த 1970கள் முதலாக தனது அனைத்து படங்களுக்குமான இசையமைப்பை பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு முதலாக பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா இசையமைக்க அனுமதிக்கப்படாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனக்கென தனி ரெக்கார்டிங் ஸ்டுடியோவை இளையராஜா உருவாக்கியுள்ளார். இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது இசை வாத்தியங்கள், உபகரணங்களை எடுத்து செல்லும் முன்னர் ஒரு நாள் அங்கு தியானம் செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும் என இளையராஜா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் இளையராஜாவை அனுமதிப்பது குறித்து நாளைக்குள் பதிலளிக்க பிரசாத் ஸ்டுடியோவிற்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக பல படங்களுக்கு இசையமைத்த தனது செண்டிமென்டலான ஸ்டுடியோவிற்குள் இளையராஜா அனுமதிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.