1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜனவரி 2022 (14:46 IST)

இளையராஜாவுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்த கொரோனா சுகாதார அதிகாரிகள்!

இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு வந்த சுகாதார அதிகாரிகள் அங்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் நபர்கள் இருந்ததால் 5000 ரூபாய் அபராதம் விதித்ததாக சொல்லப்படுகிறது.

கொரோனா கட்டுபாடுகள் இப்போது தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறுபவர்களுக்கு அபராதம் உள்ளிட்டவற்றை விதித்து வருகின்றனர் கொரோனா சுகாதாரத்துறை அதிகாரிகள். இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் சாலையில் உள்ள இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு வந்த அதிகாரிகள், அங்கு ரெக்கார்டிங்கின் போது 10 நபர்கள் இருந்ததால் 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனராம். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.