1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2023 (13:23 IST)

அந்த திரைப்படத்திற்கு லஞ்சம் கொடுத்தேன்- சமுத்திரகனி

நேற்று முன்தினம்  நடிகர் விஷால் தனது மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டதாக குற்றசாட்டு கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை தணிக்கை வாரிய அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்த நிலையில் மும்பை தணிக்கை வாரிய அதிகாரிகள் ஊழல் நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இந்த எச்சரிக்கையை விடுத்தது.

இந்த நிலையில், சிபிஎஃப்சி மீது நடிகர் சமுத்திரகனி லஞ்சப் புகார் கொடுத்துள்ளார்.

அதில்,அப்பா திரைப்படத்திற்கு வரிவிலக்கு பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தேன். அது வருத்தமான விஷயமாக இருந்தது. நியாயமாக பார்த்தால் இந்த திரைப்படத்தை அரசாங்கம் தான் எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.