1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 மே 2021 (17:35 IST)

கொரொனாவிலிருந்து குணமடைந்த’ஸ்டைலிஸ் ஸ்டார் ’’ ! ரசிகர்கள் மகிழ்ச்சி

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரொனா வைரஸ் இரண்டாம் அலை  பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தக் கொரொனாவால் சாதாரண மக்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு நடிகரும் ரசிகர்களால் ஷ்டைலிஸ் ஸ்டார் என அழைக்கப்படுபவரான  அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக டுவிட்டரில் தெரிவித்தார்.

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்றும் கூறினார். நடிகர் அல்லு அர்ஜூன் விரைவில் குணமடைய வேண்டுமென அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.  

.இந்நிலையில் இன்று நடிகர் அல்லு அர்ஜூன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார, அல்லு அர்ஜூன் சுமார் 15 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவரது இவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அல்லு அர்ஜூன் அடுத்த பட வேலைகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.