வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 17 ஜூன் 2020 (22:23 IST)

கடவுள் கொடுத்த வாய்ப்பு பிறருக்கு உதவுகிறேன் – ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்து நடன அமைப்பாளர் ஆகி, தன்  முயற்சியால் நடிகராகி, தற்போது நாடு முழுவதும் அறியப்பட்ட பிரபல நடிகராகவும் இயக்குநராகவும் இருப்பவர்  ராகவா லாரன்ஸ்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஏராளமான உதவிகள் செய்து வருகிறார். அத்துடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் புகலிடம் கொடுத்து அவர்களைப் காப்பாற்றி வருகிறார்.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், முன்பை விட சென்னையில் நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் உணவுக்காம அவர்களின் தேவைக்காகவும் நம்மிடம் உதவி கேட்டுப் போராடி வருகின்றனர்.

எனவே, இந்த நேரத்தை மக்களுக்கு உதவுவதற்காக கடவுள் கொடுத்துள்ளார். இந்த நிலை மாறி விரையில் இயல்புக்கு திரும்பும். சேவை என்பது கடவுள் என்று பதிவிட்டுள்ளார்.