வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM

“எல்லாருக்குமே மரண தண்டனை வழங்க வேண்டும்” – வரலட்சுமி சரத்குமார்

‘பாலியல் சீண்டலில் ஈடுபடும் அனைவருக்குமே மரண தண்டனை வழங்க வேண்டும்’ என வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். 
12 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தைகளை வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற இருக்கிறது. “12  வயதுக்கு கீழ் மட்டுமல்ல, டீன் ஏன் மற்றும் பெண்களை வன்புணர்வு செய்பவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்.

எல்லாருக்கும் ஒரே நீதி தான். டீஜ் ஏன் பெண்ணாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி… அனுமதி இல்லாமல் ஒருவரைத் தொடுவது குற்றம்தான்” எனத் தெரிவித்துள்ளார்  வரலட்சுமி சரத்குமார்.