1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 5 மே 2021 (18:35 IST)

நடிகர் சத்யராஜ் பங்களாவை சூழ்ந்த யானைகள் !

தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் சத்யராஜ். நண்பன், மற்றும் பாகுபலி போன்ற படத்திற்குப் பிறகு அவரது கிராப் எகிறியது. தற்போடு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள நடிகர் சத்யராஜிற்கு சொந்தமாக பங்காளா முன்பு சூழந்த காட்டுயானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

தாய் யானைகள் தங்கள் குட்டிகளுடன் புகுந்து அங்கு வயல்களில் பாய்ச்சிய நீரைக் குடித்து தாகத்தைத் தீர்த்துக்கொண்டன.

இதுகுறித்துத் தகவல் அறிந்த வனக்காவலர்கள், அங்கு வந்து காட்டுயானைகளை பத்திரமாகக் காட்டிற்குள் வழியனுப்பினர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.