1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 ஏப்ரல் 2022 (13:36 IST)

செல்வராகவன் & நட்ராஜ் நடிப்பில்… திரௌபதி இயக்குனரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

இயக்குனர் மோகன் ஜி ருத்ர தாண்டவம் படத்துக்குப் பிறகு செல்வராகவனைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய இரு படங்களும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க பட்டு வியாபார ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்கள். ஆனால் அந்த படத்தின் கதைக்களம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனால் சர்ச்சைக்குரிய ஒரு இயக்குனராகவே மோகன் ஜி பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் அவரின் மூன்றாவது படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. படத்தில் நடிக்க முன்னணி நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூஜையுடன் இன்று தொடங்கும் படத்துக்கு “பகாசூரன்” எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.