செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (19:47 IST)

பொன்னியின் செல்வன் படத்திற்காக திரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. அதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது.
 
இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.  
 
இந்நிலையில் இப்படத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் குந்தவையாக நடித்துள்ள திரிஷா வெறும் ரூ. 3 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளாராம். இரு பாகங்களிலும் பல காட்சிகளில் வரும் குந்தவையான திரிஷா வெறும் 3 கோடி வாங்கியிருப்பது கேட்டு ரசிகர்கள் ஷாக்காகி விட்டனர்.