1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (16:07 IST)

சூப்பர் ஸ்டார் நிழலில் வாழும்... போதை அடிமையுடன் என்னை ஒப்பிடாதீர்கள்.. கங்கனா ரனாவத்

இந்திய திரையுலகில் பாலிவுட்டுக்கு எப்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அவர்களுக்கான சம்பளமும் அதிகம்.  பேரும் புகழும் அதிகம். ஆனால் அப்படிப்பட்ட பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது.

சுஷாந்தின் மரணத்தை அடுத்து, நடிகை கங்கனா ரனாவத் வாரிசு அரசுகளின் அத்துமீறலை பக்கம் பக்கமாய் எடுத்துக் கூறி வந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறினார். இதற்கு பெரும் விமர்சனங்கள் உருவானது. முமையில் சிவசேனா ஆட்சி என்பதால் அவரது வீட்டு இடிக்கப்பட இருந்த நிலையில், மும்பாஈ கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில் சுஷாந்த் தற்கொலை விவகாரம் இப்போது போதைப்  கடத்தல் வழக்காக மாறியுள்ள நிலையில் ரியா கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பிரபல நடிகை சோனம் கபூர் பழிக்குப் பழி என்றால் மொத்த உலகமும் குருடுதான் என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கங்கனா , இந்த மாஃபியா குரூப் ரியாவுடன் சேர்த்து எனக்கும் நீதி வாங்கித் தரவுள்ளார்களா என்றும், தான் மக்களுக்காகப் போராடுவதால் சூப்பர் ஸ்டார்களின் நிழலில் அண்டியுள்ள போதை அடிமைகளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.