வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (17:02 IST)

பத்து தல படத்தில் ரஹ்மான் வந்தது எப்படி – இயக்குனர் விளக்கம்!

சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஒப்புக்கொண்டது எப்படி என இயக்குனர் கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.

நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. அவரது ஈஸ்வரன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அடுத்த படமான மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் பிஸியாகியுள்ளார் சிம்பு. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். முதன்முறையாக கௌதம் கார்த்திக், சிம்பு இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டருக்கு இணையத்தில் வரவேற்புக் கிடைத்துள்ளது.

இந்த படத்துக்கு இசையமைக்க ரஹ்மான் ஒப்புக்கொண்டது எப்படி என இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். அதில் ‘ஜில்லுனு ஒரு காதல் படத்தைப் போலவே ‘பத்து தல’ படத்திற்கும் இசை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அமைதி தான் படத்தின் ஒரு  அங்கமாக இருக்கிறது. அதனால் அவரிடம் இந்த கதையை தயங்கிக் கொண்டேதான் சொன்னேன். ஆனால் அவர் உடனடியாக இசையமைக்க சம்மதித்தார். விரைவில் அந்தப் படத்தின் இசைப்பணிகளில் ஈடுபட உள்ளோம்.’ எனக் கூறியுள்ளார்.