1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (15:33 IST)

“ஒரு ஊருல ரெண்டு ராஜா இருந்தாராம்…” நானே வருவேன் செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள “ஒரு ஊருல ரெண்டு இராஜா இருந்தாராம்” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை எழுதி யுவன் ஷங்கர் ராஜாவோடு இணைந்து பாடியுள்ளார் தனுஷ்.  திகிலான பின்னணியிலான பாடலாக இந்த பாடல் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.