1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (18:01 IST)

செல்வராகவன் படத்துக்கு 10 நாட்கள்தான் ஒதுக்கியுள்ளாராம் தனுஷ்! ஏன் இப்படி!

செல்வராகவன் இயக்கும் படத்துக்காக தனுஷ் இப்போதைக்கு 10 நாட்கள்தான் ஒதுக்கியுள்ளாராம் தனுஷ்.

தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்  உருவாகவுள்ள நானே வருவேன் என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் செல்வராகவன் கூட்டணி  8 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலமாக நீண்ட காலத்துக்கு பிறகு செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய மூவர் கூட்டணி இணைந்துள்ளது.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆன நிலையில் தனுஷ் இப்போது ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஆனால் இப்போதைக்கு வெறும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடக்குமாம். பின்னர் அவர் தன் படங்களுக்கான படப்பிடிப்புகளை முடித்துவிட்டு அவ்வபோது இதுபோல 10 நாட்களாக படப்பிடிப்புக்கு வருவாராம்.