1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 16 நவம்பர் 2021 (01:33 IST)

பிரபல நடிகையிடம் செல்போன் பறிப்பு!

ஐதராபாத் பூங்காவில்  ஜாகிங் சென்ற  நடிகையிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்ஆஆ. இவர்  ஐதராபாத்தில் உள்ள  கேபிஆர் பூங்காவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று ஜாகிங் சென்றார். அப்போது ஒரு மர்ம நபர் அவரை திடீரென்று தாக்கிவிட்டு அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு சென்றார்.
இதுகுறித்து நடிகை சவுராசியா போலீஸில் புகார் அளித்தார்.

இதைப் பெற்றுக்கொண்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நடிகையைத் தாக்கிய இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.