1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (21:45 IST)

’பிகில்’ படத்தை தான் முதலில் பார்ப்பேன்: லோகேஷ் கனகராஜ் நண்பர் டுவீட்

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ மற்றும் கார்த்தி ’கைதி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தீபாவளி விருந்தாக அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகவிருப்பது உறுதியாகி உள்ளது 
 
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களில் எந்த படத்தை முதலில் பார்ப்பது என்பது குறித்த டுவீட் ஒன்றை இயக்குனர் ரத்தினகுமார் பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே ’மேயாத மான்’ மற்றும் ’ஆடை’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் ‘பிகில்’ படத்தில் அட்லியுடன் இணைந்து திரைக்கதை எழுதியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் கார்த்தியின் ’கைதி’ இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர் இவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ஒரே நாளில் தனது தான் பணிபுரிந்த ’பிகில்’ திரைப்படமும் தன்னுடைய நெருங்கிய நண்பரின் ’கைதி’ திரைப்படமும் வெளியாக உள்ள நிலையில் இதில் ’பிகில்’ திரைப்படத்தை தான் முதலில் பார்ப்பேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய்யின் ’மெர்சல்’ படத்துடன் தான் இயக்கிய ’மேயாத மான்’ திரைப்படம் வெளியானது என்றும்,அப்படி இருந்தும் கூட தன்னுடைய படத்தை பார்க்காமல் மெர்சல் படத்தை தான் முதல் நாள் முதல் காட்சியை தான் பார்த்ததாகவும் ஏனெனில் தான் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்றும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் இந்த டுவீட் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது