வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : திங்கள், 16 செப்டம்பர் 2019 (16:05 IST)

தோல்வி பயத்தால் உளறிய சாண்டி - சேரனுக்கு குவியும் மக்கள் சப்போர்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. சேரனை தொடர்ந்து தற்போது சாண்டி  இரண்டு பேரை நாமினேட் செய்துள்ளார். 

 
சற்றுமுன் வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் சாண்டி, சேரன் மற்றும் ஷெரினை நாமினேட் செய்கிறார்.  அதற்கான காரணத்தை சொன்ன அவர், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஃ டப்  கண்ட்ஸ்டெண்ட் சேரன் மற்றும் ஷெரின் தான் என்று கூறி அவர்கள் இருவரையும் நாமினேட் செய்கிறார். 
 
பின்னர் வெளியில் கார்டன் ஏரியாவில் அமர்ந்து கொண்டிருக்கும் தர்ஷனிடன் "உங்களுக்கு தெரியும் என் கேம் எப்படி போகுதுன்னு... கண்டிப்பா இப்போ சேரன் சார் போகமாட்டாரு தெரியும்... மக்களோட சப்போர்ட் அவருக்கு இருக்கு.. நம்ம ஒரு பக்கம் யோசிக்குறோம். அவங்க ஒரு கால்கிலேஷன் போடுவாங்கல..? எல்லாமே ஃ டப் தான் என்று கூறி பதற்றத்தில் ஏதேதோ உளறுகிறார் சாண்டி. 
 
இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் "சாண்டிக்கு, சேரன் ஜெயிச்சுடுவாரு என்கிற பயம் வந்துவிட்டது. அதனால் இப்படியெல்லம் யோசிக்கிறான் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.