1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (15:38 IST)

ரகசிய அறையில் இருந்து கவினுக்கு கடிதம் அனுப்பி கண்டித்த சேரன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சேரனுக்கு ரகசிய அறையில் செல்வதற்கான  மற்றொரு வாய்ப்பை கமல் கடைசி நொடியில் கொடுத்திருந்தார். ஆனால்,  இது மற்ற போட்டியார்களுக்கு தெரியாது. 


 
பிக்பாஸில் இருந்து வெளியேறிவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் போட்டியார்களுக்கு சேரன் ஒரு ஷாக் கொடுத்துள்ளார். அதாவது சேரன் பிக்பாஸில் இருந்து வெளியேறும் போது லொஸ்லியா மற்றும் கவினுக்கு சில அறிவுரைகளை கூறிவிட்டு வந்தார். மேலும் காதல் முடிவுகளை பற்றியோ அல்லது காதலின் அடுத்த கட்டத்தை பற்றியோ இனி பிக்பாஸில்  பேசாதீர்கள்... நீங்கள் இருவரும் வெளியே வந்த பிறகு அதை பற்றி முடிவெடுங்கள் என்று கூறிவிட்டு வந்தார். 
 
பின்னர் சில நாட்கள் கவின் லொஸ்லியாவிடம் இதை பற்றி பேசாமல் இருந்து வந்தார். ஆனால் அவர் ப்ரோமோக்களிலும் .. நிகழ்ச்சிகளிலும் சரியாக இடம் பெறவில்லை இதனை சுதாரித்துக்கொண்ட கவின் மீண்டும் தன வேலையை ஆரம்பித்தார். அதாவது இப்போவே இந்த காதல் முடிவை சொல்லு என கூறி லொஸ்லியாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார். 
 
இந்த நிலையில் தற்போது ரகசிய அறையில் இருந்து சேரன், கவினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,  வெளியில் செல்லும் முன்னர் அவ்வளவு தூரம் சொல்லிவிட்டு சென்றேன். இருவரும் தங்களது விருப்பங்கக்ளை வெளியில் வந்து பேசுங்கள், தற்போது விளையாட்டில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள் என்று கூறினேன். அப்படியிருந்தும் நீங்கள் லாஸ்லியாவிடம் முடிவை சொல்லுங்கள் என வலியுறுத்துவது நியாயமா என்று கேட்டுள்ளார்.