1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (17:06 IST)

"அவ இப்போ காண்டுல இருக்கா"...சண்டை கிளறி விடும் வனிதா !

பிக்பாஸில் இந்த வாரம் முழுக்க சண்டைக்கு குறைவிருக்காது. நிகழ்ச்சி  மிகவும் சுவாரஸ்யமாக போகும் யாரும் மிஸ் பண்ணாமல் பாருங்கள் என்று கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். 


 
இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்தே காதலிக்கிறேன் என்று கூறி  ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரே மாதிரியாக பழகி மக்களிடம் தொடர்ந்து வெறுப்பை சம்பாதித்து வருபவர் கவின். இவர் இப்போது லொஸ்லியவை காதலிப்பதாக கூறி மக்களை வெறுபேற்றி லொஸ்லியா பெயரையும் கெடுத்துவிட்டார். 
 
இந்நிலையில் தற்போது வெளியே அனுப்படட்ட போட்டியாளர்களான சாக்ஷி ,
அபிராமி , மோகன் வைத்யா உள்ளிட்டோர் வைல்ட் கார்ட் மூலம் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். குறிப்பாக சாக்ஷியால் தான் இந்த வாரம் டிஆர்பி கிடுகிடுவென ஏறும் என எதிர்பார்க்கமுடிகிறது. கவினையும் லொஸ்லியவை பிரித்து மேய்வதற்காக தான் விஜய் டிவி பிளான் பண்ணி மீண்டும் இவர்களை அழைத்து வந்துள்ளார்கள். மேலும் சாக்ஷிக்கு ஆதரவாக வனிதாவும்,  லொஸ்லியா மற்றும் கவினின் காதல் பற்றி சொல்லி உசுப்பேத்திவிட்டு வருகிறார். ஆனால் தற்போது இவர்களின் வலையில் ஷெரினையும் நுழைந்துள்ளனர். 
 
வனிதா வலையில் சிக்கியுள்ள ஷெரின் கூடிய விரையில் கெட்ட பெயர் வாங்கி மக்களிடம் வெறுப்பை சம்பாதிப்பார் என நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.