1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (16:20 IST)

பார்த்திபனுக்காக மொட்டை அடித்துக் கொண்டாரா சீதா?

நடிகை சீதா பார்த்திபனுக்காக மொட்டை அடித்துக் கொண்டதாக பார்த்திபன் குருநாதர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குனராகவும் நடிகராகவும் அறியப்பட்டும் பார்த்திபன் பாக்யராஜின் பட்டறையில் இருந்து வந்தவர். புதிய பாதை படத்தில் நடித்து இயக்கியபோது அந்த படத்தின் நடிகையான சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டில் இருந்து பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் சீதா பார்த்திபனை திருமணம் செய்துகொண்ட போது அவருக்காக தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டார் என இயக்குனர் பாக்யராஜ் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.