வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (15:59 IST)

மச்சானுக்காக கதை ரெடி பண்ணிய இயக்குனர் ஹரி… அதுவும் வொர்க் அவுட் ஆகாது போல இருக்கே!

இயக்குனர் ஹரியும் அருண் விஜய்யும் இணைய இருந்த படம் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

சில மாதங்களுக்கும் முன்னதாக சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ‘அருவா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஸ்டுடியோ கிரின் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இப்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கும் பெயரிடாத படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கே ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்போது அருவா படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அருவா கதையை லேசாக மாற்றி தனது மனைவியின் தம்பியான அருண் விஜய்யை வைத்து இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த படத்துக்காக போடப்பட்ட பட்ஜெட்டில் இருவரின் சம்பளமும் பெரும்தொகையை எடுத்துக் கொண்டுள்ளதாம். ஆனால் மங்கு திசையில் இருக்கும் ஹரியை நம்பியும், இப்போதுதான் வளர ஆரம்பித்த அருண் விஜய்யை நம்பியும் அவ்வளவு தொகை செலவு  செய்ய எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லையாம். அதனால் அந்த படத்திற்கான எந்த வித முன்னேற்றமும் இல்லை என சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.