வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (11:36 IST)

'பம்பர்' பட இயக்குனரின் அடுத்த படத்தில் அருள்நிதி!

நீண்ட நாட்களாக ஒரு ஹிட் இல்லாமல் காத்திருந்த அருள்நிதி, தற்போது டிமாண்டி காலணி 2 மூலமாக அந்த குறையைப் போக்கியுள்ளார். எதிர்பார்க்காத அளவுக்கு வசூலைக் குவித்து வரும் நிலையில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் திரையரங்குகள் மூலமாக 40 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும் என சொல்லப்படுகிறது.

தங்கலான் போன்ற ஒரு பெரிய படத்தோடு ரிலீஸாகி டிமாண்டி காலணி இவ்வளவு பெரிய வசூலை செய்தது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அருள்நிதி அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

அதில் ஒரு படமாக பம்பர் படமெடுத்த எம் செல்வகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த படத்தை சாம் மேத்யூ என்பவர் இயக்கவுள்ளார்.