1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 25 மார்ச் 2024 (07:20 IST)

நான் ஒன்றும் தொண்டு நிறுவனம் அல்ல… என்னிடம் பேச பணம் தரவேண்டும்- பிரபல இயக்குனர் அறிவிப்பு!

பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் தமிழில் விஜய்யின் லியோ படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

பல சுயாதீனப் படங்களையும் கலைஞர்களையும் அனுராக் காஷ்யப் வெகுஜன தளத்துக்கு அறிமுகப்படுத்தி வந்தார். ஆனால் இப்போது அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “நான் நிறைய நேரத்தை புதியவர்களுக்கு உதவி செய்வதற்காக வீணடித்துள்ளேன். ஆனால் பெரும்பாலானவை முட்டாள்தனமாக முடிந்துள்ளது.

தங்களை மேதைகளாக நினைத்துக்கொள்பவர்களுக்காக என்னுடைய நேரத்தை இனிமேல் வீணாக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். அதனால் யாராவது இனிமேல் என்னை சந்திக்க வேண்டுமென்றால் அவர்களுக்கான தொகையை நிர்ணயித்துள்ளேன்.

10 நிமிடங்கள் சந்திக்க வேண்டுமென்றால் 2 லட்சம் ரூபாயும், ஒரு மணிநேரத்துக்கு 5 லட்ச ரூபாயும் தரவேண்டும். தொகையை முன்கூட்டியே தந்துவிடவேண்டும். அதற்கு சம்மதம் என்றால் மட்டும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.