1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2020 (16:18 IST)

பாட்டுப்பாடி கொரோனாவுக்கு நிதி திரட்டும் அனிருத் !

பாட்டுப்பாடி கொரோனாவுக்கு நிதி திரட்டும் அனிருத் !

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,050 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 8,325 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 1,074 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரொனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் மே 3ஆம் தேதிவரை நீட்டிப்பட்டுள்ள நிலையில்,  மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், ஊரடங்கால் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள், தொழில்நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மக்களுக்கு அரசுடன் இணைந்து உதவி வருகின்றனர்.

அதன்படி, இசையமைப்பாளர் அனிருத், யுடியூப் நடத்தும் நேரலை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும்,இன்றுஇரவு 8.52 ரசிகர்கள் தங்களுக்கு விரும்பமான பாடல்களைக் கேட்கலாம் என தெரிவித்துள்ளார்.