1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (09:09 IST)

இருட்டு தம்... இருட்டு சரக்கு... இருட்டு போட்டோ ஷூட் - கவனத்தை ஈர்க்கும் அமலா பால்!

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.

அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அண்மை காலமாக தம் அடிப்பது , சரக்கு அடிப்பது, நண்பர்களுடன் அவுட்டிங் என ஜாலியாக இருந்து வரும் புகைப்படங்களை ஒளிவு ,மறைவின்றி வெளியிட்டு வருகிறார்.

இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது இருட்டு அறையில் முகம் கூட சரியாக தெரியாதது போல் போட்டோ ஷூட் நடத்திய ஸ்டில்களை வெளியிட்டு என்னுடைய ஒரு பெண்ணிய வாழ்க்கை விதி இங்கே: என கேப்ஷன் கொடுத்து, "  ஒரு மனிதன் பெண்களைக் குறியிடும்போது அல்லது புகழ்ந்து பேசும்போது அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு நான் ஒருபோதும் தீர்ப்பளிக்க மாட்டேன்.

ஒரு பெண் அவனைப் பிடிக்காதபோது, அவனுடன் நிற்கும்போது, அல்லது அவனுடன் ஒரு எல்லையை வரையும்போது ஒரு மனிதன் எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதை உன்னிப்பாகப் பாருங்கள், அவன் உண்மையில் யார் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். என பதிவிட்டுள்ளார்.