1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 11 மே 2023 (21:17 IST)

அவர் மீது காதல் வர இது தான் காரணம் - வெளிப்படையாக கூறிய ஆலியா!

ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார். 
 
குழ்நதை பிறந்த போது கொஞ்சம் கேப் விட்டிருந்த ஆலியா தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.இந்நிலையில் கணவர் சஞ்சீவ் மீது தனக்கு எப்படி காதல் மலர்ந்தது என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 
 
நான் சீரியலில் நடிக்க சஞ்சீவ் உடன் கமிட்டான போது அவரை பார்த்ததும் எனக்குள் ஒரு ஈர்ப்பு வந்தது. பின்னர் நாளடைவில்  அவருடன் ஏற்பட்ட புரிதல், விட்டுக் கொடுக்கும் தன்மை பார்த்து காதல் மலர்ந்தது என கூறியிருக்கிறார்.