1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (16:58 IST)

ரசிகர் உயிரிழந்த சோகத்தில் நடிகர் அஜித் - என்ன செய்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமான அஜித்குமார் நடிப்பில் ஜனவரி 11ம் தேதி வெளியான திரைப்படம் துணிவு.  எச்.வினோத் இயக்கத்தில் வெளியான இப்படத்தை அஜித் ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி தீர்த்தனர். 
 
இப்படம் படம் வெளியான அன்று சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் படம் பார்க்க சென்ற 19 வயது இளைஞர் பரத் என்பவர் டேங்கர் லாரி மீது ஏறி ஆடியபோது தவறி விழுந்து உயிரிழந்தார். அதையடுத்து தியேட்டர் பவுன்சர் தன்னை குடும்பத்தினர் முன்பு அசிங்கப்படுத்தியதாக மற்றொரு ரசிகர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 
 
துணிவு படத்தால் நேர்ந்த இந்த உயிரிழைப்பை எண்ணி அஜித் மிகவும் வேதனைப்பட்டதாக ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரிம் சுந்தர் கூறியுள்ளார். அதனால் தான் அஜித் துணிவு படத்தின் வெற்றியை கூட கொண்டாடவில்லையாம்.