1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (14:40 IST)

எந்த கடவுள் பெண்கள் கோயிலாக வரக்கூடாது என சொன்னது?- ஐஸ்வர்யா ராஜேஷ் கேள்வி!

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  திரைப்படம் டிரைவர் ஜமுனா. இதையடுத்து அவர் நடிப்பில்  பர்ஹானா, தி கிரேட் இந்தியன் கிச்சன் என பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

இதில் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் படக்குழுவினரோடு கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அப்போது ‘சபரிமலைக்கு பெண்கள் செல்லக் கூடாது என எதிர்ப்புகள் எழுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் “எந்த கடவுள் பெண்கள் கோயிலுக்கு வரக்கூடாது என சொன்னது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்லக் கூடாது என மனிதர்கள்தான் சட்டத்தை இயற்றி வைத்துள்ளார்கள்.” என துணிச்சலாக பேசியுள்ளார். அவரது பேச்சுக்கு பரவலாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.